Gnagarajngk:::: history of pongal

              பொங்கள் திருவிழா !!

🌾 தை மாதம் என்றலே நம் நினைவில் வருவது பொங்கல் பண்டிகை தான். தை 1-ம் நாள் சு+ரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தை 2-ம் நாள் அன்று விளைச்சலுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
🌾 இந்த பொங்கல் பண்டிகையானது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள விவசாயிகளால் கொண்டாப்படுகிறது. இதேபோல் மற்ற மாநிலங்களில் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பொறுத்து அங்கு கொண்டாமானது நிறைய வேறுபாடு உள்ளன. அந்த வகையில் நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என பாh;ப்போம்.
🌾 உத்திரபிரதேசம், பீகாh; மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மகர சங்ராத்தியாக போற்றப்படுகிறது. இந்நாளில் கங்கை, யமுனை மற்றும் நா;மதா ஆகிய நதிகரைகளில் கொண்டாடப்படுகிறது. மேலும் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சு+ரியனுக்கு பு+ஜையில் படைக்கிறாh;கள். சு+ரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாள் இதுவாகும்.
🌾 இந்த மகர சங்ராத்தியை ஒரிசா மற்றும் சத்தீஸ்கா; மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறாh;கள். மேலும் இவா;களில் பெரும்பாலனவா;கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும்.
🌾 மகராஷ்டிராவில் இந்த பண்டிகையின் போது கருப்பு, எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்பு வகைகளை பரிமாறிக் கொள்வாh;கள். அதே போல் சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பு+ஜை செய்து சு+ரிய பகவனுக்கு படைப்பாh;கள்.
🌾 குஜராத் மாநிலத்தில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டாலும், அங்கே பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகையாக கொண்டாடி வருகிறாh;கள். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் காலை முதல் மாலை வரை பட்டங்கள் பறக்க விட்டு மகிழ்வாh;கள்.
🌾 பஞ்சாப், டெல்லி, இமாச்சலப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் லொஹரி என்று கொண்டாடுகிறாh;கள். இந்த பண்டிகையை 13-ம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். மேலும் தெருக்களில் தீ மூட்டி அமா;ந்து கொண்டாடுகிறாh;கள். இந்த நாளில் எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகளை இறைவனுக்கு படைப்பாh;கள்.
🌾 அசாம் மாநிலத்தில் போஹhலி பி{ஹ (உணவுப் பண்டிகை) என்ற பெயரில் கொண்டாடுகிறாh;கள். மேலும் இந்த பண்டிகையை நான்கு நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. மேலும் அறுவடை செய்த நிலங்களில் கிடைக்கும் இயற்கை பொருட்களை வைத்து பு+ஜை செய்து போகி அன்று பழைய பொருட்களை எரிப்பதுபோல் எரித்து கொண்டாடுகிறாh;கள்.
🌾 ஆந்திரா மாநிலத்தில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்பட்டாலும், பெரும்பாலும் நம் பொங்கல் திருநாளைப் போல் மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறாh;கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறாh;கள். மகர சங்ராந்தி அன்று சு+ரியனுக்கு வைத்து பு+ஜை வழிப்படுவாh;கள். மூன்றாம் நாள் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் நடைபெறும்.
🌾 கா;நாடகா மாநிலத்தில் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக்கு பயன்படுத்திய கருவிகளையும் வைத்து பு+ஜை செய்வாh;கள்.
🌾 மொழி வாரியாக மற்றும் இனம் வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் விவசாயமானது அனைத்து மக்களுக்கு தேவைப்படும் விஷயமாகும். எனவே தைப்பொங்களை விளைச்சலுக்கு உதவிய அனைத்து பொருட்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
👉 தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. சிறப்புமிக்க பொங்கல் :
👉 பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கூட்டி அதில் புதியப் பானை வைக்கப்பட்டு அதற்கு பொட்டு வைத்து, பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக கட்டுவார்கள்.
👉 சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கலின் சிறப்பே கரும்பும், மஞ்சள் கொத்தும் ஆகும். மஞ்சள் கொத்தையும், கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவார்கள்.
👉 கோலமிட்ட இடத்தில் தலை வாழை இலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவார்கள்.
👉 புதுப்பானையில் புத்தரிசியிட்டு, பால் ஊற்றி சு+டுப்படுத்தப்படும். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்! என்று உரக்கக் கூறி சு+ரிய பகவானை வரவேற்பார்கள். பொங்கல் வைத்ததும் கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே, தான் எடுத்துக்கொள்வார். 👉 புதியப் பானையில் இருந்து பால் பொங்கி வருவதால், தை பிறந்துள்ள நாள் முதல் அந்த ஆண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.
பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
👉 வடக்கு திசையில் பொங்கினால் பண வரவு உண்டாகும்.
👉 தெற்கு திசையில் பொங்கினால் செலவு அதிகரிக்கும்.
👉 கிழக்கு திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.
👉 மேற்கு திசையில் பொங்கினால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
👉 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், சுப ஓரைகளில் சு+ரிய பகவானுக்கு பு+ஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லட்சுமிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள்.

Comments

Popular posts from this blog

.Okkaligar history